மு.சிவலிங்கம் வலையகம்

அண்மைய பதிவுகள்
 

இலக்கியம்

பள்ளியில், கல்லூரியில், பல்கலைக் கழகத்தில் படித்த காலங்களில் நான் ஓர் இலக்கியவாதியாகவே இருந்துள்ளேன். இலக்கிய ஆர்வலனாகவும், படைப்பாளியாகவும், விமர்சகனாகவும் இருந்துள்ளேன். கவிஞனாக வாழ்ந்திருக்கிறேன். யாப்பிலக்கணத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறேன். மரபுக் கவிதைகளின் நீள, அகல, ஆழங்களைக் கண்டிருக்கிறேன். வெண்பாவில் விளையாடி இருக்கிறேன். எண்சீர் விருத்தங்களில் இழைந்திருக்கிறேன். புதுக்கவிதை என்று சொல்லப்படும் இக்காலக் கவிதையையும் விட்டு வைக்கவில்லை.

கவியரங்குகளிலும், கருத்தரங்குகளிலும், பட்டி மன்றங்களிலும் முழங்கியுள்ளேன். சிலகாலம் ஓர் இலக்கிய இதழை (சகாப்தம்) நடத்தியுள்ளேன். அதன்மூலமாக அக்கால முன்னணித் தமிழ் இலக்கியவாதிகளின் அறிமுகத்தைப் பெற்றிருக்கிறேன். ஓர் இலக்கியவாதியாக என்னுடைய படைப்புகளை, கருத்துகளை இப்பகுதியில் வெளியிட ஆர்வம் கொண்டுள்ளேன்.

இந்த வலையகத்தில்

இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்